Wednesday, March 31, 2010

பொய் விஞ்ஞானிகளும்
சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்


இந்துத்துவா பரிவாரங்களின் மோசடிகள் - அது வரலாற்றைத் திரிப்பது முதல் இன்றைய அறிவியலைத் திரிப்பது வரை- பலமுறை அம்பலமாகி இருக்கிறது. தற்போது இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக காட்டுவதற்காக இவர்கள் இறக்கிவிட்ட மோசடி விஞ்ஞானியும் அம்பலப்பட்டு நிற்கிறார். பிரதமர் அலுவலகத்தின் விண்வெளித் துறையில் கூடுதல் செயலாளராக வேலை செய்வதாக மோசடி செய்து திரிந்த புனீஸ்தனேஜா என்ற இந்தப் புளுகனை இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. இந்த மோசடிப் பேர்வழி மீது இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த கட்டுரை இங்கு பிழிந்து தரப்படுகிறது.

நியூடெல்லி ஜூன்16: சேதுக் கால்வாய் திட்டப் பணிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வாதங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வைத்து வந்த 'விண் வெளி விஞ்ஞானி' ஒரு மோசடிப் பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலுரித்துக் காட்டியபின் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ்., வேறுவழியின்றி தனது அமைப் பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜாவை 'நீக்கியுள்ளதாக' அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி ஆள் சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பொய்யர் புனீஸ்தனேஜா தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்ட வர். மேலும் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் அம்பலப்டுத்தி உள்ளது.
(இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டையின் படம் உள்ளது.)
இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் 'இஸ்ரோ'வில் பணியாற்றுவதாகவும் இரண்டு ஆண்டு பணி விடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற பொய் ஆவணங்களுடன் பல பேரை ஆர்.எஸ்.எஸ். இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜாவின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பி யிருக்கிறது. இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர். கடந்த 2005 ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக நொய்டா நகரில் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (இஸ்ரோ) மேலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் 'இஸ்ரோ வுக்கும் மேற்படி ஆளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இவரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை. விண்வெளி ஆய்வுத் துறையின் கூடுதல் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. எஸ்.வி. ரெங்கநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களூரில் உள்ளார். சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்கும் இஸ்ரோவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் புனீஸ் தனேஜாவின் வீட்டைக் கண்டுபிடித்து, அவரி டம், "பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்?" என்று கேட்ட போது, "அவ்வாறு நடந்துகொண்டதில்லை" என மேலும் ஒரு பொய்யைச் சொல்லிய புனீஸ்தனேஜா, தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கதைவிட்டார்.
"ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள்" என்று கூறிய புனீஸ்தனேஜா, "அசோக் சிங்காலுடன் சென்று, சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோதே மக்கள் மன்றத்திற்கு முதன்முதலாக வந்தேன், ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவனிடம் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டிருப்பதாவும்" தெரிவித்தார். மேலும் தான் விஞ்ஞானியே கிடையாது என்றும், சேதுக் கால்வாய் பற்றிய ஆராய்ச்சி செய்து வருவதாகவும் கூறிய புனீஸ்தனேஜாவிடம், அவரின் கல்வித் தகுதியைப் பற்றிக் கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் புனீஸ் தனேஜா விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் என்று எதுவும் கிடையாது என அரசு அளித்த அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக் கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் விசுவ இந்து பரிஷத்தும் ஆர்.எஸ்.எஸூம் மத்திய அரசை வலியுறுத்தியும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு புனீஸ்த னேஜா பற்றி கேட்டபோது, "அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்" என்பதை ஒப்புக்கொண்டார். புனீஸ்தனேஜா செய்த மோசடி பற்றிக் கேட்டதற்கு "ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அந்தப் புகார்கள் அவரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் பிரச்சாரகர் பதவியிலிருந்து நீக்கத் தகுந்தவை என ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்" என்றார்.

சேது கல்வாய் திட்டப்பணி என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையி லுள்ள பெருங்கடலில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் வகையில் ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் நீங்கிவிடும். மேலும் 30மணி நேரப் பயணமும் குறைந்துவிடும்.

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக் கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் 'விஇப' வும் ஆர்.எஸ்.எஸூம் கோருகிறது. மேலும் இதை உலகக் கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகி றது.

புவியியல் ஆய்வின்படி சேது சமுத்திரத்தில் உள்ள மணல் மேடுகள் (ராமர் பாலம்) மனிதர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே. இப் படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான படிவுகள், அல்லது மணல் திட்டுகள் எனப்படும்.
நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

No comments: