Sunday, April 29, 2007

அனைவரிடமும் கைபேசி

அனைவரிடமும் கைபேசி

இன்னும் சில ஆண்டுகள் கடந்துவிட்டால், சாதாரண மக்கள் தொலைபேசி மற்றும் இணைய இணைப்புகளைப் பெறுவது கடினமாக இருக்கும். ஏனென்றால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கம்பிவடமில்லாத(ஒயர்லெஸ்) இணைப்புகளை விரிவாக உருவாக்கிக் கொண்டு வருவதால், இனிமேல் கம்பிவட(கேபிள் லைன்) இணைப்புகளை உருவாக்குவதற்காக பணத்தைச் செலவிடப்போவதில்லை. ஆனால் இத்தகைய வசதிகள் உள்ள கைபேசிகளின் விலை கூடுதலாக இருப்பதால் மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உள்ளது.

செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியானது, கைபேசி உற்பத்தியாளர்களுக்கு கைகொடுத்துள்ளது. ரூ.1000-1500/- வரையிலான விலையில் அனைத்து வசதிகளும் கொண்ட கைபேசிகளை சந்தைப்படுத்த உள்ளனர். இன்றைக்கு இத்தகைய வசதிகொண்ட கைபேசிகள் ரூ.4000/- மும் அதற்கும் மேல்தான். கைபேசிகளின் மூளை போன்று இருக்கக் கூடியது 'சிப்'புகளாகும். இந்த சிப்புகளில் மிகநுட்பமான பல்வகையான பணிகளையும் செய்யக்கூடிய நுண்சிப்புகளை தெக்சாஸ் இன்ஸ்ட்ரூமன்ட்ஸ், குவால்காம் நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
அண்மையில் மோட்டாரோலா நிறுவனம் ரூ.2000 விலை மதிப்புள்ள கைபேசியை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தது. இதில் டிஐ சிப்புகளைப் பயன்படுத்தி இருந்தனர். இதுபோன்ற தயாரிப்புகள் வரவர சாதாரண மக்களும் எளிதாகப் பயன்படுத்த முன்வருவதோடு கைபேசி பயனாளர்களின் எண்ணிக்கையும் பெருகும் என தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

சிக்கல்: கைபேசிகளைப் பயன்படுத்த விரும்பும் மக்களுக்கு அதன் விலை ஒரு தடையாக இருக்கும் போல உள்ளதே!

தீர்வு: மலிவான விலை; எளிதான கைபேசிக் கருவிகள்

புதிய கண்டுபிடிப்புகள் பற்றி பட்டியலிட்டுள்ள 'சிஎன்என் மணி' வலைத்தளத்தில் இருந்து தமிழில்...

No comments: